
இந்த நாவல் குங்குமம் வார இதழில் தொடராக வெளியானபோது அடைந்த கண்டனங்களும் எதிர்ப்புகளும் கணக்கற்றவை. பெயரிட முடியாத ஓர் உறவின் சிக்கல்களை மிக நுணுக்கமாக விவாதிக்கும் இந்நாவல், சற்றே தடம் பிசகி இருந்தாலும் ஆபாசக் கதையாகியிருக்கும். மிகத் திறமையாக, லாகவமாக, கத்திமேல் நடப்பது போல எழுதியிருக்கிறார் ஆசிரியர்.