
கல்கி வார இதழில் தொடராக வெளிவந்தது இது. ஆனால் ஒரு தொடர்கதைக்கான எவ்வித லட்சணமும் இதில் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு கதாநாயகன், நாயகி கூடக் கிடையாது. வெறும் நாய், குரங்கு, அணில், பட்டாம்பூச்சிகளையும் இரண்டு பொடிசுகளையும் வைத்துக்கொண்டு, மிகவும் நுணுக்கமானதொரு பிரச்னையைக் கையாள்கிறது மெல்லினம். இந்நாவல் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது.