
இந்தக் கதைகளை நான் ஃபேஸ்புக்கில் எழுதினேன். ஒரு வெகுஜன தளத்தில் சற்றே மாறுபட்ட படைப்புகள் எதிர்கொள்ளக்கூடிய வினாக்களும் விமரிசனங்களும் கொடுரமானவை. அதில் மிக முக்கியமானது, ‘இந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன?’ என்கிற கேள்வி. எதையாவது சொல்லித்தான் தீரவேண்டும் என்று எழுத்தாளனுக்கு என்ன தலையெழுத்து? எதையும் சொல்லாதிருப்பதன் பேரழகை இக்கதைகளுக்கு அணிவித்து அழகு பார்க்கிறேன்.